ஒரு மாதத்தில் பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி பெல் தொழிற்சாலையில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்தில் பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x
திருச்சி பெல் தொழிற்சாலையில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, என்.ஐ.டி. வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆக்சிஜன் மட்டுமே பற்றாக்குறையாக இருப்பதாக கூறிய அவர், ஒரு மாதத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக திருச்சி பெல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்