சூரப்பாவுக்கு நோட்டீஸ் - கலையரசன் விசாரணை குழு நடவடிக்கை

சூரப்பாவுக்கு நோட்டீஸ் - கலையரசன் விசாரணை குழு நடவடிக்கை
x

சூரப்பாவுக்கு நோட்டீஸ் - கலையரசன் விசாரணை குழு நடவடிக்கை


அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார் தொடர்பாக 1 வாரத்திற்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு நீதிபதி கலையரசன் குழு   நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா 280 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது . இது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து,  ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது. விசாரணை முழுமையாக நடந்து முடிந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு, கலையரசன் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1 வாரத்திற்குள் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் எழுத்துப் பூர்வமாக அளிக்க  வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரப்பாவின் விளக்கத்தை பொறுத்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், பதில் திருப்திகரமாக இல்லை என்றால் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்