ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு  - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
x
ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஊரடங்கு ரத்துக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், பகுதி நேர ஊரடங்கால், கொரோனா குறையும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும், திங்கள் கிழமைக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப, ஞாயிற்றுக் கிழமை பணி செய்ய வேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டார். பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக விளக்கிய மனுவை நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு விசாரித்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்