தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தற்செயலாக நடந்த பேட்டி என ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எழுத்துபூர்வமாக பதில் அளிப்பதாக ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அவரிடம் விசாரணை ஆணையம் 15 கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்கு ரஜினிகாந்த் தரப்பில் ஆணையத்திடம் பதில் கடிதம் அளிக்கப்பட்டது. குறிப்பாக கலவரத்திற்கு பிறகு பேட்டி அளித்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, செய்தியாளர் சந்திப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல எனவும், தற்செயலாக நடந்தது என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். செய்திகள் அடிப்படையில் எந்த தகவலையும் கூறவில்லை எனவும், மனதில் தோன்றிய கருத்தை மட்டுமே தெரிவித்ததாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது பதிலில் சில சந்தேகம் உள்ளதால், ரஜினிகாந்த்திடம் மீண்டும் விளக்கம் கேட்போம் என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்