வாக்கு எண்ணிக்கை தேதி மாறுமா..? ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் - சத்யபிரதா சாகு

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
x
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவது குறித்து, ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். பாதுகாப்பு விதிமுறைகளை, வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிப்பது தொடர்பாக ஆய்வு செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் ஆகியோர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். இறுதியாக தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உடன் தாம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன் பிறகு முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்