ஏப். 9 முதல் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தொரிவித்துள்ளது.
ஏப். 9 முதல் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
x
ஏப். 9 முதல் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல் 

வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தொரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அடுத்த இரண்டு நாட்களுக்கு நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம்,இதன் காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்