மேலும் 25 மாணவிகளுக்குக் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 168 ஆக உயர்வு

தஞ்சை மாவட்டத்திம் மேலும் 25 மாணவிகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
x
தஞ்சை மாவட்டத்திம் மேலும் 25 மாணவிகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தஞ்சையில் ஏற்கனவே 11 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 143 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே 6 மாணவிகள் மற்றும் 1 ஆசிரியருக்குத் தொற்று உறிதி செய்யப்பட்டிருந்த நிலையில், 200 மாணவிகளுக்கு சோதனை செய்யப்பட்டதில் மேலும் 25 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்