சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி மனு

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
x
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவில்,  தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று தரப்பின் விளக்கத்தை கேட்டறிந்த நீதிபதி, மத்திய குற்றப்பிரிவினரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்