பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து டிசம்பரில் முடிவு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

பத்து, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு செய்யப்படும் எனவும், அரசு பள்ளி ஆசிரியர்களின் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து டிசம்பரில் முடிவு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
x
பத்து, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு செய்யப்படும் எனவும், அரசு பள்ளி ஆசிரியர்களின் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட   8 ஊராட்சிகளில்  குடிநீர் இணைப்பு திட்டத்திற்கான பணிகளை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோ​ட்டையன், காலி பணியிடங்களை பொறுத்த வரையில் நிதிநிலைக்கு ஏற்ப நிரப்பி வருவதாகவும், அரசு நடத்தும் பட்டய கணக்காளர் பயிற்சி வகுப்பு ஜனவரியில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு பதினொறாம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்