சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில்
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை
செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை
போலீசார் கைப்பற்றினர். நேற்று அரசு
விடுமுறை என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள்
மூடப்பட்டிருந்தன. ஆனால் செம்பட்டி அருகே கோழிப்பண்ணை பிரிவு கடை, புதுக்கோடாங்கிபட்டி மற்றும் போடிக்காமன்வாடி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.
Next Story