டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு - மேலும் 26 பேர் சிக்கினர்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
x
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு, விஏஓ தேர்வு, குரூப் 2 தேர்வு ஆகியவற்றில் முறைகேடு கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த மூன்று தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 51 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் இந்த வழக்கில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 97 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்