மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு மையம் விவகாரம்: "தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லாதது அதிர்ச்சி" - சு.வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு மையம் விவகாரம்: தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லாதது அதிர்ச்சி - சு.வெங்கடேசன்
x
மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர், மற்றும்,  சிஆர்பி எஃப் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ் விரு பகுதிகளிலும் அறிவிக்க வேண்டும் என்றும், அவர் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்