நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - நடிகை சனம் ஷெட்டி புகார்

நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் தர்ஷன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சனம் ஷெட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் தர்ஷன் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல்நிலையத்தில், பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்