தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 5 ஆயிரத்து 603 பேர் குணமடைந்த நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சென்னையில் புதிதாக 1,278 பேருக்கு கொரோனா 

சென்னையில் புதிதாக ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் இன்று 925 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்