கிசான் திட்டம் முறைகேடு வழக்கு - 2 பெண் வேளாண் அதிகாரிகள் கைது

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்
கிசான் திட்டம் முறைகேடு வழக்கு - 2 பெண் வேளாண் அதிகாரிகள் கைது
x
கிசான் திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 52 ஆயிரம் பேர் ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை 8 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முறைகேடாக பணம் பெற்ற 10 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிசான் முறைகேடு தொடர்பாக 7 வேளாண் அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று  வல்லம் ஒன்றிய வேளாண் உதவி பெண் அலுவலர்கள் சாவித்திரி மற்றும் ஆஷா ஆகியோரை  சி.பி.சி.ஐ டி போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்