தமிழகத்தில் 5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - புதிதாக 5,495 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது. புதிதாக 5 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5 ஆயிரத்து 717 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் 8 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மேலும் 994 பேருக்கு கொரோனா 

சென்னையில் மேலும் 994 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.சென்னையில் மட்டும் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக சேலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 699 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்