விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
x
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேவையான எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்