சென்னையில் 3 வயது சிறுமி கடத்தல் - தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும் போலீசார்

சென்னையில் 3 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
சென்னையில் 3 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் ரயில்நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பப்லு தன் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் பவன்குமாருக்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்படவே, அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்து வந்துள்ளார். அப்போது பப்லுவின் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்ற அந்த நபர், அதில் 3 வயது சிறுமியை மட்டும் கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியை மர்ம நபர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்