12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - வருண்குமாருக்கு சென்னையில் பணி

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
x
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. ஆக இருந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த வருண்குமார்,  சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய பி.ராஜன், சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஆக பிரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி. ஆகவும், தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்