தமிழகத்தில் மேலும் 5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 81 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 976 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 81 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 976 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை  4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 334 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று 79 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது. 51 ஆயிரத்து 633 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மேலும் 992 பேருக்கு கொரோனா 

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது, இன்று 992 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது , சென்னையில் இன்று ஆயிரத்து 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், மேலும் 12 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்