தமிழகத்திற்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள்- நாளை காலை 8 மணி முதல் முன் பதிவு துவக்கம்

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மார்க்கமாக, வருகிற 10 தேதி முதல் வாரம் 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
x
சென்னை எழும்பூர் -  செங்கோட்டை இடையே திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மார்க்கமாக, வருகிற 10 தேதி முதல் வாரம் 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - கன்னியகுமரி இடையே வருகிற 8 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதே போல், சென்னை  சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே வருகிற 8 ஆம் தேதி முதலும், திருச்சி - நாகர்கோவில் இடையே வருகிற 7 ஆம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு  நாளை காலை 8 மணி முதல் துவங்குகிறது. உறுதிப்படுத்தப்பட்ட பயணசீட்டுடன் முக கவசம், அணிந்து, 90 நிமிடங்களுக்கு முன்பு ரயில்நிலையம் வருமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்