969 உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு புகார் - தமிழக அரசு,பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

969 உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
969 உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு புகார் - தமிழக அரசு,பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு  நடைபெற்றது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த எழுத்து தேர்வில், 5,275 பேர் தேர்ச்சி பெர்றுள்ளதாக, கடந்த மார்ச் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பியடித்து தேர்ச்சி பெற்றுள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி, டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு மனுவுக்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம்,
மற்றும் டி.ஜி.பி ஆகியோருக்கு உத்தரவிட்டு,  விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்