ஆன்லைன் வகுப்புகள்- உயர்நீதிமன்றம் கேள்வி

ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிகள் தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிகள் தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகளை பதிவு செய்து வெளியிட  முடியுமா? என்று கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகளை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்