தமிழகத்தில் 5,995 பேருக்கு கொரோனா - இன்று 5,764 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 5,995 பேருக்கு கொரோனா - இன்று 5,764 பேர் டிஸ்சார்ஜ்
x
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 764 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், மேலும் 101 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சுமார் 53 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் புதிதாக ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 713 கொரோனா தொற்று உறுதியானது, சென்னையில் இன்று 866 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 23 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்தம் 12 ஆயிரத்து 708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்