தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்தம் 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது , மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக உயர்ந்து இருக்கிறது, இன்று சுமார் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது . மேலும் 5 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இன்று 116 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 53 ஆயிரத்து 283 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மேலும் ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 809 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் மேலும் ஆயிரத்து 132 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று 22 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சென்னையில் 12 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  



Next Story

மேலும் செய்திகள்