விநாயகர் சிலை நிறுவ அனுமதி கோரும் பாஜக

சமூக இடைவெளியோடு, விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சிலை நிறுவ அனுமதி கோரும் பாஜக
x
சமூக இடைவெளியோடு, விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.  அவர் விடுத்துள்ள அறிக்கையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் காவல்துறை அனுமதியோடு, விநாயகர் சிலைகளை நிறுவி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு விடுத்துள்ள செய்தியில், விநாயகர் ஊர்வலத்துக்கும், சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார். சிறு கோயில்களை திறந்து வழிபட அனுமதி அளித்த தமிழக அரசு, விநாயகர் சிலை நிறுவி வழிபடுவதற்கு மட்டும் தடை என்பதை நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Card 4 எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் முதலில் பிள்ளையார் வைத்து வணங்குவது வழக்கமான ஒன்று என கூறியுள்ள முருகன், தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

Card 5 மக்கள் சமூக இடைவெளியோடும், விழிப்புணர்வோடும் விநாயகரை வணங்குவார்கள் என்பது உறுதி என கூறியுள்ள அவர், தடையை மீண்டும் பரிசீலிக்குமாறு கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்