மணலி சேமிப்பு கிடங்கில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

மணலி சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் 10 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
x
லெபனான் நாட்டில் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட
740 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி உடனடியாக 740 டன் அமோனியம் நைட்ரேட்டையும் அப்புறப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து, மணலி சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் 10 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்