"நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், நோயாளிகளை அழைத்து வர கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 2 ஆயிரம் வீடுகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
Next Story