பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் - தானும் தூக்கு போட்டு தற்கொலை

அருப்புக்கோட்டையில் பெற்ற குழந்தையை மூழ்கடித்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் - தானும் தூக்கு போட்டு தற்கொலை
x
அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி , இவர் தனது ஒரு வயது குழந்தையுடன் மாமனார் முருகேசன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது , கதவு உள்புறமாக பூட்டப்பட்டு மருமகள் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் , கதவை உடைத்து அவரின் சடலத்தை மீட்டனர். 
ஒரு வயது குழந்தை , தண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அருப்புகோட்டை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்