தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 5 ஆயிரத்து 849 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. 4 ஆயிரத்து 910 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . இன்று 74 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. 51 ஆயிரத்து 765 பே சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3 ஆயிரத்து 144 பேர்  உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் மேலும் 1171 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று 1 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . மேலும் 21 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சென்னையில் இதுவரை 73 ஆயிரத்து 681 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 13 ஆயிரத்து 941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்