மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்றவர் கைது - ஆன்லைனில் கொள்முதல் செய்தது அம்பலம்

சென்னையில், மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
x
உயிரரைப் பறிக்கும் மாஞ்சா நூல் விற்பனை சட்டவிரோதம் என அறிவித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாதவரம் அடுத்த மூலக்கடை பகுதியில் சாலையில் சென்றவர் கழுத்தில் மாஞ்சா சிக்கி அறுத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து உடனடி விசாரணையில் இறங்கிய போலீசார், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜோசப் என்பவரை கைது செய்தனர். ஆன்லைன் மூலம் காற்றாடி கொள்முதல் செய்த அவர், மாஞ்சா நூல் சேர்த்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 140 காற்றாடிகளை பறிமுதல் செய்த நிலையில், மாஞ்சா நூல் காற்றாடி விற்றால், ஓராண்டு சிறையில் அடைக்குமாறு ஜோசப் எழுதிக்கொடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்