தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு

கூட்டுறவு வங்கிகள் அனைத்து விதமான கடன் வழங்குவதை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
x
கூட்டுறவு வங்கிகள் அனைத்து விதமான கடன் வழங்குவதை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும், இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன் உள்ளிட்ட எந்த கடன்களையும் வழங்கக்கூடாது என அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்