பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு? - விஜயபாஸ்கர் அறிக்கை
மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஓபிசியில் கிரிமிலேயர் என சொல்லப்படும் வளமான பிரிவினருக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், சமூக கல்வி அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story