கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்

கொரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.
கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்
x
நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொ​ரோனாவுக்கு தீர்வு என்ன? என எல்லோரும் அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவின் முதல் கண்டுபிடிப்பாக வெளியானது தான் கோவேக்சின் மருந்து. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்த ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர் என்ற செய்தி நமக்கெல்லாம் பெருமையளிக்க கூடியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நெமிலி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகனாக பிறந்தவரே கிருஷ்ணா எல்லா. அங்குள்ள பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ரோட்டரி திட்டத்தின் உதவியால் அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ளார். படிப்பு முடித்து அங்கேயே தங்க தீர்மானித்தவரை அவருடைய தாய் அன்புக்கட்டளை இட்டு மீண்டும் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். தன்னுடைய நாட்டு மக்களுக்கு தன் மகன் பணியாற்ற வேண்டும் என அவர் விரும்பிய கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த கிருஷ்ணா எல்லா, ஹைதராபாத்தில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 1995ல் மாசு இல்லாத தொழிற்பூங்காவை உருவாக்க திட்டமிட்ட சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு முதல் வடிவம் கொடுத்தது இவரின் பாரத் பயோ டெக் நிறுவனம். இங்கு இருந்து தான் ஜிகா வைரஸூக்கான மருந்தை கண்டுபிடித்துள்ளார் கிருஷ்ணா எல்லா. இந்த தடுப்பூசிக்கு 30 முதல் 40 டாலர்கள் வரை உலக நாடுகள் விலை நிர்ணயித்த போதிலும் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு டாலருக்கு மருந்தை அறிமுகப்படுத்தியவர் இவர்... இந்த மலிவு விலை மருந்து பலரால் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் தான் கொரோனாவை கொல்ல கோவேக்சின் மருந்தை கண்டுபிடித்திருக்கிறார் கிருஷ்ணா எல்லா. கோவேக்சின் இந்தியாவின் முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த மருந்தை கண்டறிந்த கிருஷ்ணா எல்லாவை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் அவரது சொந்த ஊர் மக்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்