சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மத்திய குழு இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், இன்று சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மத்திய குழு இன்று ஆலோசனை
x
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக  மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட
7 பேர் இடம்பெற்றுள்ளனர். பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மத்திய ஆய்வு குழு தலைவர் ஆர்த்தி அகுஜா, மிண்ணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டிற்கு புறப்பட்டு சென்றனர். 3 வது முறையாக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், நாளை  வரும் 10 ந்தேதி வரை தங்கி சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர். தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன், மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்