சாத்தன்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : மேலும் 5 காவலர்கள் கைது - 14 நாள் காவலில் சிறையில் அடைப்பு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சாத்தன்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : மேலும் 5 காவலர்கள் கைது - 14 நாள் காவலில் சிறையில் அடைப்பு
x
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களில், உதவி ஆய்வாளர் பால்த்துரை, மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு உடல் நல குறைபாடு இருந்ததால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். செல்லத்துரை, சாமத்துரை, வெயிலு முத்து ஆகியோர்  குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் காவல் பிறபிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

"அரசு சாட்சியாக மாறி உள்ள தலைமை காவலர் ரேவதி" - சிபிசிஐடி அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜர்

சாத்தான்குளம் விவகாரத்தில், அரசு சாட்சியாக மாறி உள்ள தலைமை காவலர் ரேவதி, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். ரேவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்பு சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இதனிடையே, ரேவதி வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்