ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு தடை

லாக்கப் மரணம், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டக் குறைபாடுகளை களையக் கோரிய வழக்கில், தன்னிச்சையான குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
லாக்கப் மரணம், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டக் குறைபாடுகளை களையக் கோரிய வழக்கில், தன்னிச்சையான குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இந்த விவகாரங்கள் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக டிஜிபி வழங்கிய பரிந்துரையை ஏற்று ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வதாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்  அமைப்பின் மீது பரவலான விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்