சாத்தான்குளம் தந்தை,மகன் மரண வழக்கு - விசாரணையை கையில் எடுத்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து இரண்டு வழக்கு பதிவு செய்த சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
x
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்து அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிஐ இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவான வழக்குகளில் இருந்து புலன் விசாரணையை தொடங்கிய சிபிஐ குழு, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி, கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த சம்பவம் குறித்து மேலும், ஐந்து பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்