மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?
x
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திரா அழகுமலை தனக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களின் வீடுகளை  தொடர்ந்து இடித்து வருவதாக கூறப்படுகிறது,. மேலும் அவர் அங்குள்ள பெண்களையும், குழந்தைகளையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார்,. இது தொடர்பாக ஒத்தக்கடை காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் 5 முறை புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது,. இந்த நிலையில் இந்திரா அழகுமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன்  சென்று  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்

Next Story

மேலும் செய்திகள்