அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, முன்னாள் அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேரில் வழங்கினர்.
அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி
x
புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, உறவினர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, அஞ்சலி செலுத்தினர். சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, முன்னாள் அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேரில் வழங்கினர். இதனிடையே பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூக்கடை நடத்தி வரும் 27 வயதுடைய ராஜா என்பவர் மீது,போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்