அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேதநாயகி என்பவர் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வேதநாயகி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை,  பதவி உயர்வுக்கு தடை அல்ல என்பதை குறிப்பிட்டு வாதிட்டார்... இதையடுத்து நீதிபதிகள், மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்