ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் உதயகுமார் ஆலோசனை

ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் உதயகுமார் ஆலோசனை
x
ஐ.டி. நிறுவனத்தினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் தகவல் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகளோடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், வரும் 6 ஆம் தேதி முதல்  50 சதவிகித ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படலாம் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என விளக்கினார். அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்திய அமைச்சர், ஐ.டி. நிறுவன கோரிக்கைகளை கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்