வாடகை வாகன உரிமையாளர்களுக்கு நிதியுதவி கோரிய மனு - தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நிவாரணம் வழங்க வேண்டும், வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது,.இதையடுத்து, அந்த உத்தரவுகளை தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்,
Next Story