சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை 22 பேர் பலி
கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதைப்போல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story