2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று

சிதம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 தீட்சிதர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று
x
சிதம்பரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 தீட்சிதர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஆனி திருமஞ்சன திருவிழாவில் பங்கேற்ற மற்றும் கொரோனா  தொற்றுக்கு ஆளான தீட்சிதருடன் தொடர்பில் இருந்த 214 தீட்சிதர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அனைவரின் வீடுகளிலும் அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தினர். அப்போது, ஸ்டிக்கர் ஒட்ட சென்ற அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தீட்சிதர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்