தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்த‌து

தமிழகத்தின் மொத்த பாதிப்பில் மூன்றில் 2 பங்கு பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது.
x
தமிழகத்தின் மொத்த பாதிப்பில் மூன்றில் 2 பங்கு பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் சென்னையில் ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்று 51 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இதுவரை 776 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் உயிரிழப்புகள் சென்னை வாசிகளை பீதியடைய வைத்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்த‌து

தமிழகத்தில் கொரோனா இன்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 78ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. 68 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் மொத்தமாக ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் வலுக்கும் கொரோனா வேட்டை தமிழக மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்