பட்டாக் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம் - 5 பேரை சிறையில் அடைத்தது காவல்துறை

சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் அருகே, பட்டாக் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டாக் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம் - 5 பேரை சிறையில் அடைத்தது காவல்துறை
x
பெருங்களத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 18ந் தேதி நள்ளிரவு தனது பிறந்தநாளை, நண்பர்களுடன், சித்தாலபாக்கம் அருகே  அரசன்கழனியை சேர்ந்த துரைராஜ் என்பவர் வீட்டு வாசலில் கொண்டாடினார். அப்போது இரண்டரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய காட்சி, சமூக வளைதலங்களில் பரவியது. இந் நிகழ்வில் பலர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிலரை  தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்