சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கொரோனா- கடலூர் கிளை சிறைச்சாலை மூடல்

கடலூர் கிளை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை மூடப்பட்டது.
x
கடலூர் கிளை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை மூடப்பட்டது. கடலூர் மாவட்டம் சோழதரம் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி செல்போன் திருட்டில் ஒருவரைக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் விசாரித்துள்ளனர். இன்று அவருக்கு ஒரு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த காவல் நிலையத்தில், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்றது. பின்னர், அங்கிருக்கும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்