கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த ஐ.ஜி.அன்பு - வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியான ஐ.ஜி. அன்பு நேரில் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த ஐ.ஜி.அன்பு -  வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை
x
சென்னை தாம்பரம் சரகத்திற்கு உட்பட்ட தாம்பரம், கன்னட பாளையம், சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி, அன்பு, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் நகராட்சி சார்பில் இலவச பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொண்டனர். வீடு, வீடாக சென்று மக்களுக்கு சோதனையும் நடத்தப்பட்டது. பின்னர் பரிசோதனை செய்த அனைவருக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்