நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போயஸ் தோட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
x
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், நடிகர் ரஜினி வீட்டில்  வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து இரண்டு மோப்ப நாய்களுடன் 4 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழு ரஜினி இல்லம் அமைந்துள்ள போயஸ் தோட்டத்துக்கு சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறி சோதனை நடத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் எனினும் வீட்டில் இருந்தவர்கள் கொரோனா அச்சம் காரணமாக வீட்டிற்குள் வர வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து செக்யூரிட்டி அறை உள்ளிட்ட இடங்களில் மட்டும்   சுமார் ஒரு மணி நேரம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் மர்ம பொருள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.  இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்